கடுங்கண்ண கொல் களிற்றால்

புறநானூறு

கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து சமந் தாங்கவும்
பார்உடைத்த குண்டு அகழி
நீர் அழுவம் நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இவன் யார் என்குவை ஆயின் இவனே

Next Post

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

Related Posts

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்

புறநானூறு நீலக் கச்சைப் பூவார் ஆடைப்பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியேதன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்கையின் வாங்கித்…
Read More

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

புறநானூறு ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்றுகொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்றுதெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்உண்ணார் ஆகுப…
Read More

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

புறநானூறு இளையோர் சூடார் வளையோர் கொய்யார்நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்பாணன் சூடான் பாடினி அணியாள்ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்தவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றைமுல்லையும் பூத்தியோ…
Read More