இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

புறநானூறு

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

சாத்தந்தையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *