சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே

சாத்தந்தையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *