ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

புறநானூறு

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே

நெட்டிமையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

Next Post

வழிபடு வோரை வல்லறி தீயே

Related Posts

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

புறநானூறு ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்வழுவாய் மருங்கின் கழுவாயும் உள எனநிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்செய்தி…
Read More

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோஊர்கொள வந்த பொருநனொடுஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே…
Read More

என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

புறநானூறு என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்ஆடுஆடு என்ப ஒருசா ரோரேஆடன்று என்ப ஒருசா ரோரேநல்லபல்லோர் இருநன் மொழியேஅஞ்சிலம்பு…
Read More