சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

புறநானூறு

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்வினை முடித்து எனக்
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *