புறநானூறு
கையது வேலே காலன புழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரி இரும் பித்தை பொலியச் சூடி
வரி வயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே
ஔவையார்