கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

புறநானூறு

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

இடைக்குன்றூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *