அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

புறநானூறு

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவு இன்று ஆயினும் படு பதம் பிழை யாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

Next Post

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

Related Posts

நளிஇரு முந்நீர் ஏணி யாக

புறநானூறு நளிஇரு முந்நீர் ஏணி யாகவளிஇடை வழங்கா வானம் சூடியமண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்அரசுஎனப் படுவது நினதே பெருமஅலங்குகதிர்க்…
Read More

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

புறநானூறு வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்நீர்நிலை…
Read More