அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

புறநானூறு

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவு இன்று ஆயினும் படு பதம் பிழை யாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

ஔவையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *