வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

புறநானூறு

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *