தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

புறநானூறு

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க இவண் தணிக எனக் கூறி
வினவல் ஆனா முதுவாய் இரவல
தைத் திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
அடுதீ அல்லது சுடுதீ அறியாது
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல்
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே

கோவூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *