Tag: வெண்பா

  • ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரை

    புறநானூறு

    ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும் சிறு வரை
    சென்று நின் றோர்க்கும் தோன்றும் மன்ற
    களிறு மென்று இட்ட கவளம் போல
    நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
    வார் அசும்பு ஒழுகு முன்றில்
    தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே

    கபிலர்

  • மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்

    புறநானூறு

    மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்
    அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
    பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
    நட்டனை மன்னோ முன்னே இனியே
    பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
    நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
    சேறும் – வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
    கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
    நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே

    கபிலர்

  • அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்

    புறநானூறு

    அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
    எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
    இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
    வென்று எறி முரசின் வேந்தர் எம்
    குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

    பாரி மகளிர்

  • அளிதோ தானே பேரிருங் குன்றே

    புறநானூறு

    அளிதோ தானே பேரிருங் குன்றே
    வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
    நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
    கிணை மகட்கு எளிதால் பாடினள் வரினே

    கபிலர்

  • கடந்து அடு தானை மூவிரும் கூடி

    புறநானூறு

    கடந்து அடு தானை மூவிரும் கூடி
    உடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதே
    முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
    முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
    யாமும் பாரியும் உளமே
    குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

    கபிலர்

  • அளிதோ தானே பாரியது பறம்பே

    புறநானூறு

    அளிதோ தானே பாரியது பறம்பே
    நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
    உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
    ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
    இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
    மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே
    நான்கே அணிநிற ஒரி பாய்தலின் மீது அழிந்து
    திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
    வான் கண் அற்று அதன் மலையே வானத்து
    மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
    மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
    புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
    தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
    யான்அறி குவென் அது கொள்ளும் ஆறே
    சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
    விரையலி கூந்தல் நும் விறலியர் பின் வர
    ஆடினிர் பாடினிர் செலினே
    நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே

    கபிலர்

  • குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

    புறநானூறு

    குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
    ஆரம் ஆதலின் அம் புகை அயலது
    சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
    பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு
    பாரியும் பரிசிலர் இரப்பின்
    வாரேன் என்னான் அவர் வரை யன்னே

    கபிலர்

  • நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

    புறநானூறு

    நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
    புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
    கடவுள் பேணேம் என்னா ஆங்கு
    மடவர் மெல்லியர் செல்லினும்
    கடவன் பாரி கை வண்மையே

    கபிலர்

  • பாரி பாரி என்றுபல ஏத்தி

    புறநானூறு

    பாரி பாரி என்றுபல ஏத்தி
    ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
    பாரி ஒருவனும் அல்லன்
    மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே

    கபிலர்

  • ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்

    புறநானூறு

    ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
    பலரும் வருவர் பரிசில் மாக்கள்
    வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
    ஈதல் எளிதே மாவண் தோன்றல்
    அது நற்கு அறிந்தனை யாயின்
    பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

    கபிலர்