Tag: புறநானூறு

  • வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

    புறநானூறு

    வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
    தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
    குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
    குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
    கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
    நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
    ஆனிலை உலகத் தானும் ஆனாது
    உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
    தெரிகோல் ஞமன்ன் போல ஒரு திறம்
    பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க
    செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
    கடற்படை குளிப்ப மண்டி அடர்ப் புகர்ச்
    சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
    பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
    அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
    பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
    பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
    முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
    இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
    வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
    நாடுசுடு கமழ்புகை எறித்த லானே
    செலிஇயர் அத்தை நின் வெகுளி வால்இழை
    மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே
    ஆங்க வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
    தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
    தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
    ஒண்கதிர் ஞாயிறு போலவும்
    மன்னிய பெரும நீ நிலமிசை யானே

    காரிகிழார்

  • தூங்கு கையான் ஓங்கு நடைய

    புறநானூறு

    தூங்கு கையான் ஓங்கு நடைய
    உறழ் மணியான் உயர் மருப்பின
    பிறை நுதலான் செறல் நோக்கின
    பா வடியால் பணை எருத்தின
    தேன் சிதைந்த வரை போல
    மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து
    அயறு சோரூம் இருஞ் சென்னிய
    மைந்து மலிந்த மழ களிறு
    கந்து சேர்பு நிலைஇ வழங்கப்
    பாஅல் நின்று கதிர் சோரும்
    வான உறையும் மதி போலும்
    மாலை வெண் குடை நீழலான்
    வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
    அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
    ஆய் கரும்பின் கொடிக் கூரை
    சாறு கொண்ட களம் போல
    வேறு வேறு பொலிவு தோன்றக்
    குற் றானா உலக் கையால்
    கலிச் சும்மை வியல் ஆங்கண்
    பொலம் தோட்டுப் பைந் தும்பை
    மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
    சின மாந்தர் வெறிக் குரவை
    ஓத நீரில் பெயர்பு பொங்க
    வாய் காவாது பரந்து பட்ட
    வியன் பாசறைக் காப் பாள
    வேந்து தந்த பணி திறையாற்
    சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்
    ஓங்கு கொல்லியோர் அடு பொருந
    வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்
    வாழிய பெரும நின் வரம்பில் படைப்பே
    நிற் பாடிய அலங்கு செந்நாப்
    பிற்பிறர் இசை நுவ லாமை
    ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ
    மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
    புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு வந்து
    இனிது காண்டிசின் பெரும முனிவிலை
    வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
    சோறுயட நடத்தி நீ துஞ்சாய் மாறே

    குறுங்கோழியூர் கிழார்

  • களிறு கடைஇய தாள்

    புறநானூறு

    களிறு கடைஇய தாள்
    கழல் உரீஇய திருந்துஅடிக்
    கணை பொருது கவிவண் கையால்
    கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
    மா மறுத்த மலர் மார்பின்
    தோல் பெயரிய எறுழ் முன்பின்
    எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
    ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
    கொள்ளை மேவலை ஆகலின் நல்ல
    இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ
    தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
    மீனின் செறுக்கும் யாணர்ப்
    பயன்திகழ் வைப்பின் பிறர் அகன்றலை நாடே

    கருங்குழல் ஆதனார்

  • வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

    புறநானூறு

    வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
    போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
    இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
    ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
    கடந்து அடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
    பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
    மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி
    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே

    கபிலர்

  • ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

    புறநானூறு

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் என
    அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
    கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
    எங்கோ வாழிய குடுமி தங் கோச்
    செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே

    நெட்டிமையார்

  • வழிபடு வோரை வல்லறி தீயே

    புறநானூறு

    வழிபடு வோரை வல்லறி தீயே
    பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
    நீமெய் கண்ட தீமை காணின்
    ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
    வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
    தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே
    அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
    மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
    செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
    நெய்தருங் கானல் நெடியோய்
    எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே

    ஊன் பொதி பசுங் குடையார்

  • அரி மயிர்த் திரள் முன்கை

    புறநானூறு

    அரி மயிர்த் திரள் முன்கை
    வால் இழை மட மங்கையர்
    வரி மணற் புனை பாவைக்குக்
    குலவுச் சினைப் பூக் கொய்து
    தண் பொருநைப் புனல் பாயும்
    விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
    பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
    வெப் புடைய அரண் கடந்து
    துப்புறுவர் புறம்பெற் றிசினே
    புறம் பொற்ற வய வேந்தன்
    மறம் பாடிய பாடினி யும்மே
    ஏர் உடைய விழுக் கழஞ்சின்
    சீர் உடைய இழை பெற்றிசினே
    இழை பெற்ற பாடி னிக்குக்
    குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனுமே
    என ஆங்கு ஒள்அழல் புரிந்த தாமரை
    வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே

    பேய்மகள் இளவெயினியார்

  • பாணர் தாமரை மலையவும் புலவர்

    புறநானூறு

    பாணர் தாமரை மலையவும் புலவர்
    பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
    அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி
    இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
    இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே

    நெட்டிமையார்

  • இவன் யார் என்குவை ஆயின் இவனே

    புறநானூறு

    இவன் யார் என்குவை ஆயின் இவனே
    புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
    எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
    மறலி அன்ன களிற்றுமிசை யோனே
    களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
    பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
    சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
    மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே
    நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம
    பழன மஞ்ஞை உகுத்த பீலி
    கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
    கொழுமீன் விளைந்த கள்ளின்
    விழுநீர் வேலி நாடுகிழ வோனே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • கடுங்கண்ண கொல் களிற்றால்

    புறநானூறு

    கடுங்கண்ண கொல் களிற்றால்
    காப் புடைய எழு முருக்கிப்
    பொன் இயல் புனை தோட்டியான்
    முன்பு துரந்து சமந் தாங்கவும்
    பார்உடைத்த குண்டு அகழி
    நீர் அழுவம் நிவப்புக் குறித்து
    நிமிர் பரிய மா தாங்கவும்
    ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
    சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
    பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
    வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை
    புலவு நாற்றத்த பைந்தடி
    பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
    கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
    பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
    மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
    ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
    இருநிலத்து அன்ன நோன்மை
    செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே

    கபிலர்