Tag: எட்டுத்தொகை

  • ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

    புறநானூறு

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் என
    அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
    கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
    எங்கோ வாழிய குடுமி தங் கோச்
    செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே

    நெட்டிமையார்

  • வழிபடு வோரை வல்லறி தீயே

    புறநானூறு

    வழிபடு வோரை வல்லறி தீயே
    பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
    நீமெய் கண்ட தீமை காணின்
    ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
    வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
    தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே
    அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
    மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
    செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
    நெய்தருங் கானல் நெடியோய்
    எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே

    ஊன் பொதி பசுங் குடையார்

  • அரி மயிர்த் திரள் முன்கை

    புறநானூறு

    அரி மயிர்த் திரள் முன்கை
    வால் இழை மட மங்கையர்
    வரி மணற் புனை பாவைக்குக்
    குலவுச் சினைப் பூக் கொய்து
    தண் பொருநைப் புனல் பாயும்
    விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
    பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
    வெப் புடைய அரண் கடந்து
    துப்புறுவர் புறம்பெற் றிசினே
    புறம் பொற்ற வய வேந்தன்
    மறம் பாடிய பாடினி யும்மே
    ஏர் உடைய விழுக் கழஞ்சின்
    சீர் உடைய இழை பெற்றிசினே
    இழை பெற்ற பாடி னிக்குக்
    குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனுமே
    என ஆங்கு ஒள்அழல் புரிந்த தாமரை
    வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே

    பேய்மகள் இளவெயினியார்

  • பாணர் தாமரை மலையவும் புலவர்

    புறநானூறு

    பாணர் தாமரை மலையவும் புலவர்
    பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
    அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி
    இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
    இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே

    நெட்டிமையார்

  • இவன் யார் என்குவை ஆயின் இவனே

    புறநானூறு

    இவன் யார் என்குவை ஆயின் இவனே
    புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
    எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
    மறலி அன்ன களிற்றுமிசை யோனே
    களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
    பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
    சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
    மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே
    நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம
    பழன மஞ்ஞை உகுத்த பீலி
    கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
    கொழுமீன் விளைந்த கள்ளின்
    விழுநீர் வேலி நாடுகிழ வோனே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • கடுங்கண்ண கொல் களிற்றால்

    புறநானூறு

    கடுங்கண்ண கொல் களிற்றால்
    காப் புடைய எழு முருக்கிப்
    பொன் இயல் புனை தோட்டியான்
    முன்பு துரந்து சமந் தாங்கவும்
    பார்உடைத்த குண்டு அகழி
    நீர் அழுவம் நிவப்புக் குறித்து
    நிமிர் பரிய மா தாங்கவும்
    ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
    சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
    பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
    வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை
    புலவு நாற்றத்த பைந்தடி
    பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
    கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
    பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
    மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
    ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
    இருநிலத்து அன்ன நோன்மை
    செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே

    கபிலர்

  • கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

    புறநானூறு

    கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
    வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்
    பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்
    புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
    வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
    தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்
    துளங்கு இயலாற் பணை எருத்தின்
    பா வடியாற்செறல் நோக்கின்
    ஒளிறு மருப்பின் களிறு அவர
    காப் புடைய கயம் படியினை
    அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
    விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
    நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
    ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
    நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய
    வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
    நற் பனுவல் நால் வேதத்து
    அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
    நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
    வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
    யூபம் நட்ட வியன்களம் பலகொல்
    யாபல கொல்லோ பெரும வார் உற்று
    விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
    பாடினி பாடும் வஞ்சிக்கு
    நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே

    கபிலர்

  • வினை மாட்சிய விரை புரவியடு

    புறநானூறு

    வினை மாட்சிய விரை புரவியடு
    மழை யுருவின தோல் பரப்பி
    முனை முருங்கத் தலைச்சென்று அவர்
    விளை வயல் கவர்பு ஊட்டி
    மனை மரம் விறகு ஆகக்
    கடி துறைநீர்க் களிறு படீஇ
    எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
    செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
    புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
    துணை வேண்டாச் செரு வென்றிப்
    புலவு வாள் புலர் சாந்தின்
    முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
    மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
    பனிப் பகன்றைக் சுனிப் பாகல்
    கரும்பு அல்லது காடு அறியாப்
    பெருந் தண்பணை பாழ் ஆக
    ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை
    நாம நல்லமர் செய்ய
    ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே

    பாண்டரங் கண்ணனார்

  • தென் குமரி வட பெருங்கல்

    புறநானூறு

    தென் குமரி வட பெருங்கல்
    குண குட கடலா வெல்லை
    குன்று மலை காடு நாடு
    ஒன்று பட்டு வழி மொழியக்
    கொடிது கடிந்து கோல் திருத்திப்
    படுவது உண்டு பகல் ஆற்றி
    இனிது உருண்ட சுடர் நேமி
    முழுது ஆண்டோர் வழி காவல
    குலை இறைஞ்சிய கோள் தாழை
    அகல் வயல் மலை வேலி
    நிலவு மணல் வியன் கானல்
    தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்
    தண் தொண்டியோர் அடு பொருந
    மாப் பயம்பின் பொறை போற்றாது
    நீடு குழி அகப் பட்ட
    பீடு உடைய எறுழ் முன்பின்
    கோடு முற்றிய கொல் களிறு
    நிலை கலங்கக் குழி கொன்று
    கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
    நீ பட்ட அரு முன்பின்
    பெருந் தளர்ச்சி பலர் உவப்பப்
    பிறிது சென்று மலர் தாயத்துப்
    பலர் நாப்பண் மீக் கூறலின்
    உண் டாகிய உயர் மண்ணும்
    சென்று பட்ட விழுக் கலனும்
    பெறல் கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்
    ஏந்து கொடி இறைப் புரிசை
    வீங்கு சிறை வியல் அருப்பம்
    இழந்து வைகுதும்.இனிநாம் இவன்
    உடன்று நோக்கினன் பெரிது எனவும்
    வேற்று அரசு பணி தொடங்குநின்
    ஆற்ற லொடு புகழ் ஏத்திக்
    காண்கு வந்திசின் பெரும ஈண்டிய
    மழையென மருளும் பல் தோல் மலையெனத்
    தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை
    உடலுநர் உட்க வீங்கிக் கடலென
    வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
    கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
    இடியென முழங்கு முரசின்
    வரையா ஈகைக் குடவர் கோவே

    குறுங்கோழியூர் கிழார்

  • அடுநை யாயினும் விடுநை யாயினும்

    புறநானூறு

    அடுநை யாயினும் விடுநை யாயினும்
    நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
    செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
    பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
    தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
    கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
    நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
    வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
    கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
    நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
    ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
    சிலைத்தார் முரசும் கறங்க
    மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே

    ஆலத்தூர் கிழார்