ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புறநானூறு

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

Next Post

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

Related Posts

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்

புறநானூறு ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்பாடிப் பெற்ற பொன்னணி யானைதமர்எனின் யாவரும் புகுப அமர்எனின்திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்கண்மாறு நீட்ட…
Read More

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோஊர்கொள வந்த பொருநனொடுஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே…
Read More

மண் திணிந்த நிலனும்

புறநானூறு மண் திணிந்த நிலனும்நிலம் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும்வளித் தலைஇய தீயும்தீ முரணிய நீரும் என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது…
Read More
Exit mobile version