கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

புறநானூறு

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

Next Post

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

Related Posts

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

புறநானூறு இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்துமன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்நின்னொடு தூக்கிய வென்வேற் செழியஇரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டியபெருங்கல் அடாரும்…
Read More

அறையும் பொறையும் மணந்த தலைய

புறநானூறு அறையும் பொறையும் மணந்த தலையஎண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-கூர் வேல் குவைஇய மொய்ம்பின்தேர்வண் பாரி…
Read More

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்

புறநானூறு கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழஎரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடுஉறழ்வேல்…
Read More
Exit mobile version