மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் – சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்
திறன்இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால்
அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப் பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே

பூதப்பாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

Next Post

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

Related Posts

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்

புறநானூறு கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்களம்மலி குப்பை காப்பில வைகவும்விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்பொய்யா எழினி…
Read More

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

புறநானூறு ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்சுரன்முதல் இருந்த சில்வளை விறலிசெல்வை யாயின் சேணோன் அல்லன்முனைசுட…
Read More

ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

புறநானூறு ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலேஅணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றேதிரைவளை முன்கை பற்றிவரைநிழல் சேர்கம் நடந்திசின்…
Read More
Exit mobile version