புறநானூறு
கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி
அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்
எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே
பொய்கையார்
Leave a Reply Cancel reply