எருமை அன்ன கருங்கல் இடை தோறு

புறநானூறு

எருமை அன்ன கருங்கல் இடை தோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனைநீயோ பெரும
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள் பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே

நரிவெரூஉத் தலையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *