அரி மயிர்த் திரள் முன்கை

புறநானூறு

அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற் றிசினே
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே
ஏர் உடைய விழுக் கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனுமே
என ஆங்கு ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே

பேய்மகள் இளவெயினியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *