அளிதோ தானே பாரியது பறம்பே

புறநானூறு

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே
நான்கே அணிநிற ஒரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான் கண் அற்று அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்
யான்அறி குவென் அது கொள்ளும் ஆறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையலி கூந்தல் நும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

Next Post

கடந்து அடு தானை மூவிரும் கூடி

Related Posts

பொய்யா கியரோ பொய்யா கியரோ

புறநானூறு பொய்யா கியரோ பொய்யா கியரோபாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றியபொன்புனை திகிரியின் பொய்யா கியரோஇரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்பூண்போர்அடு தானை…
Read More

இரவலர் புரவலை நீயும் அல்லை

புறநானூறு இரவலர் புரவலை நீயும் அல்லைபுரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்குஈவோர் உண்மையும் காண் இனி நின்ஊர்க்கடுமரம் வருந்தத் தந்து யாம்…
Read More

மண் திணிந்த நிலனும்

புறநானூறு மண் திணிந்த நிலனும்நிலம் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும்வளித் தலைஇய தீயும்தீ முரணிய நீரும் என்றாங்குஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது…
Read More
Exit mobile version