புறநானூறு
அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே
ஆலத்தூர் கிழார்
Leave a Reply Cancel reply