குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ இவ் உலகத் தானே

சேரமான் கணைக்கா லிரும்பொறை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *