ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

புறநானூறு

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி
செல்வை யாயின் சேணோன் அல்லன்
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழ களிறு அணியும்
பகைப்புலத் தோனே பல் வேல் அஞ்சி
பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
வறத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே

ஔவையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *