மாசற விசித்த வார்புஉறு வள்பின்

புறநானூறு

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்து நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடம் கமழ
இவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே

மோசிகீரனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நாடன் என்கோ ஊரன் என்கோ

Next Post

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

Related Posts

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்

புறநானூறு தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்ஏந்தெழில் மழைக் கண் இன் நகை மகளிர்புன் மூசு கவலைய முள்…
Read More

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை

புறநானூறு கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரைஅருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்வரிநவில் பனுவல்…
Read More

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

புறநானூறு அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாதுஇருள்கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்குஅர சிழந்து…
Read More
Exit mobile version