இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

புறநானூறு

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

சாத்தந்தையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

Next Post

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

Related Posts

ஆடு இயல் அழல் குட்டத்து

புறநானூறு ஆடு இயல் அழல் குட்டத்துஆர் இருள் அரை இரவில்முடப் பனையத்து வேர் முதலாக்கடைக் குளத்துக் கயம் காயப்பங்குனி உயர் அழுவத்துத்தலை நாள்மீன் நிலை…
Read More

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

புறநானூறு இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்துமன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்நின்னொடு தூக்கிய வென்வேற் செழியஇரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டியபெருங்கல் அடாரும்…
Read More

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்

புறநானூறு வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்பூழி மயங்கப் பல உழுது வித்திப்பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்களை…
Read More
Exit mobile version