அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
வடபுல மன்னர் வாட வடல்குறித்
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே

மருதினிள நாகனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

Next Post

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

Related Posts

இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு இரு முந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும்வளி வழங்கு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றாங்குஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியைஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்சோறு…
Read More

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

புறநானூறு கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்நெருநல் உண்டனம் என்னாது பின்னும்செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்அனையர் வாழியோ இரவலர் அவரைப்புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்உடைமை ஆகும்…
Read More

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்

புறநானூறு குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்பயிலாது அல்கிய பல்காழ் மாலைமையிரும் பித்தை பொலியச் சூட்டிப்புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றைஉவலைக் கண்ணித்…
Read More
Exit mobile version