புறநானூறு
களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்துஅடிக்
கணை பொருது கவிவண் கையால்
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்
தோல் பெயரிய எறுழ் முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின் பிறர் அகன்றலை நாடே
கருங்குழல் ஆதனார்
Leave a Reply Cancel reply