விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்

புறநானூறு

விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒருதா மாகிய பெருமை யோரும்
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே
அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்
_______________________ உரைப்பக் கேண்மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
இரவின் எல்லை வருவது நாடி
உரை ________________________________
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்
செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ
அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப
கெடல் அருந் திருவ_______________
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்
காவு தோறும் ___________________
மடங்கல் உண்மை மாயமோ அன்றே

கோதமனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *