புறநானூறு
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய் நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே
மாங்குடி கிழார்
Leave a Reply Cancel reply