புறநானூறு
வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
வறன்யான் நீங்கல் வேண்டி என் அரை
நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல்அரு வந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே
கல்லாடனார்
Leave a Reply Cancel reply