வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

புறநானூறு

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின்
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்
எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்
பதலை ஒருகண் பையென இயக்குமின்
மதலை மாக்கோல் கைவலம் தமின் என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்
கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை நின் ஒப் போர் என
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையொடும் விரைஇக் கொண்ம் எனச்
சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச் சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே

வண்பரணர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *