புறநானூறு
வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல் என்னறி யலன்கொல்
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே
ஔவையார்
Leave a Reply Cancel reply