வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

புறநானூறு

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே
செலிஇயர் அத்தை நின் வெகுளி வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நிலமிசை யானே

காரிகிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

எருமை அன்ன கருங்கல் இடை தோறு

Next Post

களிறு கடைஇய தாள்

Related Posts

மாவா ராதே மாவா ராதே

புறநானூறு மாவா ராதே மாவா ராதேஎல்லார் மாவும் வந்தன எம்இல்புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்தசெல்வன் ஊரும் மாவா ராதேஇருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்விலங்கிடு பெருமரம்…
Read More

என்திறத்து அவலம் கொள்ளல் இனியே

புறநானூறு என்திறத்து அவலம் கொள்ளல் இனியேவல்வார் கண்ணி இளையர் திளைப்பநாகாஅல் என வந்த மாறே எழாநெல்பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்வளைஇல் வறுங்கை ஓச்சிக்கிளையுள்ஒய்வலோ கூறுநின்…
Read More

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

புறநானூறு பொய்கை நாரை போர்வில் சேக்கும்நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்மென்புல…
Read More
Exit mobile version