புறநானூறு
தொடி யுடைய தோள் மணந்தணன்
கடி காவிற் பூச் சூடினன்
தண் கமழுஞ் சாந்து நீவினன்
செற் றோரை வழி தபுத்தனன்
நட் டோரை உயர்பு கூறினன்
வலியரென வழி மொழியலன்
மெலியரென மீக் கூறலன்
பிறரைத் தான் இரப் பறியலன்
இரந் தோர்க்கு மறுப் பறியலன்
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர் படை புறங் கண்டனன்
கடும் பரிய மாக் கடவினன்
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்
ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்
பாண் உவப்பப் பசி தீர்த்தனன்
மயக்குடைய மொழி விடுத்தனன் ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படுவழிப் படுக இப் புகழ்வெய்யோன் தலையே
பேரெயின் முறுவலார்
Leave a Reply Cancel reply