புறநானூறு
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே தாங்காது
படுமழை உருமின் இறங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்து எம்
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எ·கின் சிவந்த உண்கண்
தொடியுறழ் முன்கை இளையோள்
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
Leave a Reply Cancel reply