தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

புறநானூறு

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் குமே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *