தென் பவ்வத்து முத்துப் பூண்டு

புறநானூறு

தென் பவ்வத்து முத்துப் பூண்டு
வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
_____________ங்கடல் தானை
இன்னிசைய விறல் வென்றித்
தென் னவர் வய மறவன்
மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய
தேறுபெ________________த்துந்து
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல
___________த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
இலம்படு காலை ஆயினும்
புலம்பல்போ யின்று பூத்தஎன் கடும்பே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *