புறநானூறு
தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமார் வையத்து வலமுறை வளைஇ
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடு
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்
இன்னிசைப் பறையடு வென்றி நுவலத்
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினும் நோகோ யானே
ஆலத்தூர் கிழார்
Leave a Reply Cancel reply