புறநானூறு
______டைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன
________டமைந் தனனே
அன்னன் ஆயினும் பாண நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட___
களவுப் புளியன்ன விளை_____
_________வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியடு நெய்பெய்து அட்டுத்
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு இனி திருந்த பின்_______
___________தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில்
சீறூர் மன்னனைப் பாடினை செலினே
Leave a Reply Cancel reply