புறவின் அல்லல் சொல்லிய கறையடி

புறநானூறு

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதல்நின் புகழும் அன்றே சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே

மாறோக்கத்து நப்பசலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வரை புரையும் மழகளிற்றின் மிசை

Next Post

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

Related Posts

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

புறநானூறு யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்பஇழை வலந்த பஃறுன்னத்துஇடைப் புரைபற்றிப் பிணி விடாஅஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்தபேஎன் பகையென ஒன்று என்கோஉண்ணா மையின் ஊன்…
Read More

அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

புறநானூறு அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனிநிழலினும் போகா நின் வெய்யோள் பயந்தபுகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா எனஎன்இவண் ஒழித்த அன்பி லாளஎண்ணாது இருக்குவை…
Read More

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
Read More
Exit mobile version