புறநானூறு
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
வன்புல வைப்பி னதுவே_சென்று
தின்பழம் பசீஇ ன்னோ பாண
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
Leave a Reply Cancel reply