புறநானூறு
பிறர்வேல் போலா தாகி இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
இரும்புறம் நீறும் ஆடிக் கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்
மங்கல மகளிரொடு மாலை சூட்டி
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும் ஆங்கு
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே
விரியூர் கிழார்
Leave a Reply Cancel reply