புறநானூறு
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு
அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
இனிநட் டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே
உறையூர் இளம்பொன் வாணிகனார்
Leave a Reply Cancel reply