பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்

புறநானூறு

பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக் கோவே
இவரே பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *