புறநானூறு
பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
அவி உணவினோர் புறங் காப்ப
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
அதற் கொண்டு வரல் ஏத்திக்
கரவு இல்லாக் கவிவண் கையான்
வாழ்க எனப் பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் பிறர் இல் என
அது நினைத்து மதி மழுகி
அங்கு நின்ற எற் காணூஉச்
சேய் நாட்டுச் செல் கிணைஞனை
நீபுரவலை எமக்கு என்ன
மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
கடல் பயந்த கதிர் முத்தமும்
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
__________ பொற்கோட்டு யானையர்
கவர் பரிக் கச்சை நன்மான்
வடி மணி வாங்கு உருள
__________ நல்தேர்க் குழுவினர்
கத ழிசை வன்க ணினர்
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
கடல் ஒலி கொண்ட தானை
அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே
உலோச்சனார்
Leave a Reply Cancel reply