புறநானூறு
பாசறை யீரே பாசறை யீரே
துடியன் கையது வேலே அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பொருள்
பாணன் கையது தோலே காண்வரக்
கடுந்தெற்று மூடையின்
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வேண்டோள்
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக
நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ
அதுகண்டு பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே
அரிசில் கிழார்
Leave a Reply Cancel reply