பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

புறநானூறு

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே

பொத்தியார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *