ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்

புறநானூறு

ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்
இன்னாது அம்ம இவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *