ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

புறநானூறு

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர் இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனால்
நோயிலர் ஆகநின் புதல்வர் யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே

ஆவூர் மூலங்கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *